< அப்போஸ்தலர் 24 >
1 ௧ ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
ਪਞ੍ਚਭ੍ਯੋ ਦਿਨੇਭ੍ਯਃ ਪਰੰ ਹਨਾਨੀਯਨਾਮਾ ਮਹਾਯਾਜਕੋ(ਅ)ਧਿਪਤੇਃ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਪੌਲਸ੍ਯ ਪ੍ਰਾਤਿਕੂਲ੍ਯੇਨ ਨਿਵੇਦਯਿਤੁੰ ਤਰ੍ਤੁੱਲਨਾਮਾਨੰ ਕਞ੍ਚਨ ਵਕ੍ਤਾਰੰ ਪ੍ਰਾਚੀਨਜਨਾਂਸ਼੍ਚ ਸਙ੍ਗਿਨਃ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕੈਸਰਿਯਾਨਗਰਮ੍ ਆਗੱਛਤ੍|
2 ௨ அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
ਤਤਃ ਪੌਲੇ ਸਮਾਨੀਤੇ ਸਤਿ ਤਰ੍ਤੁੱਲਸ੍ਤਸ੍ਯਾਪਵਾਦਕਥਾਂ ਕਥਯਿਤੁਮ੍ ਆਰਭਤ ਹੇ ਮਹਾਮਹਿਮਫੀਲਿਕ੍ਸ਼਼ ਭਵਤੋ ਵਯਮ੍ ਅਤਿਨਿਰ੍ੱਵਿਘ੍ਨੰ ਕਾਲੰ ਯਾਪਯਾਮੋ ਭਵਤਃ ਪਰਿਣਾਮਦਰ੍ਸ਼ਿਤਯਾ ਏਤੱਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਬਹੂਨਿ ਮਙ੍ਗਲਾਨਿ ਘਟਿਤਾਨਿ,
3 ௩ கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.
ਇਤਿ ਹੇਤੋ ਰ੍ਵਯਮਤਿਕ੍ਰੁʼਤਜ੍ਞਾਃ ਸਨ੍ਤਃ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਸਰ੍ੱਵਦਾ ਭਵਤੋ ਗੁਣਾਨ੍ ਗਾਯਮਃ|
4 ௪ உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
ਕਿਨ੍ਤੁ ਬਹੁਭਿਃ ਕਥਾਭਿ ਰ੍ਭਵਨ੍ਤੰ ਯੇਨ ਨ ਵਿਰਞ੍ਜਯਾਮਿ ਤਸ੍ਮਾਦ੍ ਵਿਨਯੇ ਭਵਾਨ੍ ਬਨੁਕਮ੍ਪ੍ਯ ਮਦਲ੍ਪਕਥਾਂ ਸ਼੍ਰੁʼਣੋਤੁ|
5 ௫ என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
ਏਸ਼਼ ਮਹਾਮਾਰੀਸ੍ਵਰੂਪੋ ਨਾਸਰਤੀਯਮਤਗ੍ਰਾਹਿਸੰਘਾਤਸ੍ਯ ਮੁਖ੍ਯੋ ਭੂਤ੍ਵਾ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੇਸ਼਼ੁ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਰਾਜਦ੍ਰੋਹਾਚਰਣਪ੍ਰਵ੍ਰੁʼੱਤਿੰ ਜਨਯਤੀਤ੍ਯਸ੍ਮਾਭਿ ਰ੍ਨਿਸ਼੍ਚਿਤੰ|
6 ௬ இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.
ਸ ਮਨ੍ਦਿਰਮਪਿ ਅਸ਼ੁਚਿ ਕਰ੍ੱਤੁੰ ਚੇਸ਼਼੍ਟਿਤਵਾਨ੍; ਇਤਿ ਕਾਰਣਾਦ੍ ਵਯਮ੍ ਏਨੰ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਸ੍ਵਵ੍ਯਵਸ੍ਥਾਨੁਸਾਰੇਣ ਵਿਚਾਰਯਿਤੁੰ ਪ੍ਰਾਵਰ੍ੱਤਾਮਹਿ;
7 ௭ அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,
ਕਿਨ੍ਤੁ ਲੁਸ਼਼ਿਯਃ ਸਹਸ੍ਰਸੇਨਾਪਤਿਰਾਗਤ੍ਯ ਬਲਾਦ੍ ਅਸ੍ਮਾਕੰ ਕਰੇਭ੍ਯ ਏਨੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ
8 ௮ இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
ਏਤਸ੍ਯਾਪਵਾਦਕਾਨ੍ ਭਵਤਃ ਸਮੀਪਮ੍ ਆਗਨ੍ਤੁਮ੍ ਆਜ੍ਞਾਪਯਤ੍| ਵਯੰ ਯਸ੍ਮਿਨ੍ ਤਮਪਵਾਦਾਮੋ ਭਵਤਾ ਪਦਪਵਾਦਕਥਾਯਾਂ ਵਿਚਾਰਿਤਾਯਾਂ ਸਤ੍ਯਾਂ ਸਰ੍ੱਵੰ ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਵੇਦਿਤੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤੇ|
9 ௯ யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
ਤਤੋ ਯਿਹੂਦੀਯਾ ਅਪਿ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਕਥਿਤਵਨ੍ਤ ਏਸ਼਼ਾ ਕਥਾ ਪ੍ਰਮਾਣਮ੍|
10 ௧0 பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.
ਅਧਿਪਤੌ ਕਥਾਂ ਕਥਯਿਤੁੰ ਪੌਲੰ ਪ੍ਰਤੀਙ੍ਗਿਤੰ ਕ੍ਰੁʼਤਵਤਿ ਸ ਕਥਿਤਵਾਨ੍ ਭਵਾਨ੍ ਬਹੂਨ੍ ਵਤ੍ਸਰਾਨ੍ ਯਾਵਦ੍ ਏਤੱਦੇਸ਼ਸ੍ਯ ਸ਼ਾਸਨੰ ਕਰੋਤੀਤਿ ਵਿਜ੍ਞਾਯ ਪ੍ਰਤ੍ਯੁੱਤਰੰ ਦਾਤੁਮ੍ ਅਕ੍ਸ਼਼ੋਭੋ(ਅ)ਭਵਮ੍|
11 ௧௧ நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
ਅਦ੍ਯ ਕੇਵਲੰ ਦ੍ਵਾਦਸ਼ ਦਿਨਾਨਿ ਯਾਤਾਨਿ, ਅਹਮ੍ ਆਰਾਧਨਾਂ ਕਰ੍ੱਤੁੰ ਯਿਰੂਸ਼ਾਲਮਨਗਰੰ ਗਤਵਾਨ੍ ਏਸ਼਼ਾ ਕਥਾ ਭਵਤਾ ਜ੍ਞਾਤੁੰ ਸ਼ਕ੍ਯਤੇ;
12 ௧௨ தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
ਕਿਨ੍ਤ੍ਵਿਭੇ ਮਾਂ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰੰ ਕੇਨਾਪਿ ਸਹ ਵਿਤਣ੍ਡਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੰ ਕੁਤ੍ਰਾਪਿ ਭਜਨਭਵਨੇ ਨਗਰੇ ਵਾ ਲੋਕਾਨ੍ ਕੁਪ੍ਰਵ੍ਰੁʼੱਤਿੰ ਜਨਯਨ੍ਤੁੰ ਨ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਨ੍ਤਃ|
13 ௧௩ இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.
ਇਦਾਨੀਂ ਯਸ੍ਮਿਨ੍ ਯਸ੍ਮਿਨ੍ ਮਾਮ੍ ਅਪਵਦਨ੍ਤੇ ਤਸ੍ਯ ਕਿਮਪਿ ਪ੍ਰਮਾਣੰ ਦਾਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੁਵਨ੍ਤਿ|
14 ௧௪ உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
ਕਿਨ੍ਤੁ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਕ੍ਯਗ੍ਰਨ੍ਥੇ ਵ੍ਯਵਸ੍ਥਾਗ੍ਰਨ੍ਥੇ ਚ ਯਾ ਯਾ ਕਥਾ ਲਿਖਿਤਾਸ੍ਤੇ ਤਾਸੁ ਸਰ੍ੱਵਾਸੁ ਵਿਸ਼੍ਵਸ੍ਯ ਯਨ੍ਮਤਮ੍ ਇਮੇ ਵਿਧਰ੍ੰਮੰ ਜਾਨਨ੍ਤਿ ਤਨ੍ਮਤਾਨੁਸਾਰੇਣਾਹੰ ਨਿਜਪਿਤ੍ਰੁʼਪੁਰੁਸ਼਼ਾਣਾਮ੍ ਈਸ਼੍ਵਰਮ੍ ਆਰਾਧਯਾਮੀਤ੍ਯਹੰ ਭਵਤਃ ਸਮਕ੍ਸ਼਼ਮ੍ ਅਙ੍ਗੀਕਰੋਮਿ|
15 ௧௫ நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
ਧਾਰ੍ੰਮਿਕਾਣਾਮ੍ ਅਧਾਰ੍ੰਮਿਕਾਣਾਞ੍ਚ ਪ੍ਰਮੀਤਲੋਕਾਨਾਮੇਵੋੱਥਾਨੰ ਭਵਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਕਥਾਮਿਮੇ ਸ੍ਵੀਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤਥਾਹਮਪਿ ਤਸ੍ਮਿਨ੍ ਈਸ਼੍ਵਰੇ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਂ ਕਰੋਮਿ;
16 ௧௬ இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਾਨਵਾਨਾਞ੍ਚ ਸਮੀਪੇ ਯਥਾ ਨਿਰ੍ਦੋਸ਼਼ੋ ਭਵਾਮਿ ਤਦਰ੍ਥੰ ਸਤਤੰ ਯਤ੍ਨਵਾਨ੍ ਅਸ੍ਮਿ|
17 ௧௭ பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
ਬਹੁਸ਼਼ੁ ਵਤ੍ਸਰੇਸ਼਼ੁ ਗਤੇਸ਼਼ੁ ਸ੍ਵਦੇਸ਼ੀਯਲੋਕਾਨਾਂ ਨਿਮਿੱਤੰ ਦਾਨੀਯਦ੍ਰਵ੍ਯਾਣਿ ਨੈਵੇਦ੍ਯਾਨਿ ਚ ਸਮਾਦਾਯ ਪੁਨਰਾਗਮਨੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
18 ௧௮ அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
ਤਤੋਹੰ ਸ਼ੁਚਿ ਰ੍ਭੂਤ੍ਵਾ ਲੋਕਾਨਾਂ ਸਮਾਗਮੰ ਕਲਹੰ ਵਾ ਨ ਕਾਰਿਤਵਾਨ੍ ਤਥਾਪ੍ਯਾਸ਼ਿਯਾਦੇਸ਼ੀਯਾਃ ਕਿਯਨ੍ਤੋ ਯਿਹੁਦੀਯਲੋਕਾ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰੰ ਮਾਂ ਧ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
19 ௧௯ அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
ਮਮੋਪਰਿ ਯਦਿ ਕਾਚਿਦਪਵਾਦਕਥਾਸ੍ਤਿ ਤਰ੍ਹਿ ਭਵਤਃ ਸਮੀਪਮ੍ ਉਪਸ੍ਥਾਯ ਤੇਸ਼਼ਾਮੇਵ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਦਾਨਮ੍ ਉਚਿਤਮ੍|
20 ௨0 நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
ਨੋਚੇਤ੍ ਪੂਰ੍ੱਵੇ ਮਹਾਸਭਾਸ੍ਥਾਨਾਂ ਲੋਕਾਨਾਂ ਸੰਨਿਧੌ ਮਮ ਦਣ੍ਡਾਯਮਾਨਤ੍ਵਸਮਯੇ, ਅਹਮਦ੍ਯ ਮ੍ਰੁʼਤਾਨਾਮੁੱਥਾਨੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਵਿਚਾਰਿਤੋਸ੍ਮਿ,
21 ௨௧ நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਤਿਸ਼਼੍ਠੰਨਹੰ ਯਾਮਿਮਾਂ ਕਥਾਮੁੱਚੈਃ ਸ੍ਵਰੇਣ ਕਥਿਤਵਾਨ੍ ਤਦਨ੍ਯੋ ਮਮ ਕੋਪਿ ਦੋਸ਼਼ੋ(ਅ)ਲਭ੍ਯਤ ਨ ਵੇਤਿ ਵਰਮ੍ ਏਤੇ ਸਮੁਪਸ੍ਥਿਤਲੋਕਾ ਵਦਨ੍ਤੁ|
22 ௨௨ இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
ਤਦਾ ਫੀਲਿਕ੍ਸ਼਼ ਏਤਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤਨ੍ਮਤਸ੍ਯ ਵਿਸ਼ੇਸ਼਼ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਵਿਜ੍ਞਾਤੁੰ ਵਿਚਾਰੰ ਸ੍ਥਗਿਤੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਥਿਤਵਾਨ੍ ਲੁਸ਼਼ਿਯੇ ਸਹਸ੍ਰਸੇਨਾਪਤੌ ਸਮਾਯਾਤੇ ਸਤਿ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਚਾਰਮ੍ ਅਹੰ ਨਿਸ਼਼੍ਪਾਦਯਿਸ਼਼੍ਯਾਮਿ|
23 ௨௩ பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
ਅਨਨ੍ਤਰੰ ਬਨ੍ਧਨੰ ਵਿਨਾ ਪੌਲੰ ਰਕ੍ਸ਼਼ਿਤੁੰ ਤਸ੍ਯ ਸੇਵਨਾਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਕਰਣਾਯ ਵਾ ਤਦੀਯਾਤ੍ਮੀਯਬਨ੍ਧੁਜਨਾਨ੍ ਨ ਵਾਰਯਿਤੁਞ੍ਚ ਸ਼ਮਸੇਨਾਪਤਿਮ੍ ਆਦਿਸ਼਼੍ਟਵਾਨ੍|
24 ௨௪ சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
ਅਲ੍ਪਦਿਨਾਤ੍ ਪਰੰ ਫੀਲਿਕ੍ਸ਼਼ੋ(ਅ)ਧਿਪਤਿ ਰ੍ਦ੍ਰੁਸ਼਼ਿੱਲਾਨਾਮ੍ਨਾ ਯਿਹੂਦੀਯਯਾ ਸ੍ਵਭਾਰ੍ੱਯਯਾ ਸਹਾਗਤ੍ਯ ਪੌਲਮਾਹੂਯ ਤਸ੍ਯ ਮੁਖਾਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਧਰ੍ੰਮਸ੍ਯ ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤਮ੍ ਅਸ਼੍ਰੌਸ਼਼ੀਤ੍|
25 ௨௫ அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
ਪੌਲੇਨ ਨ੍ਯਾਯਸ੍ਯ ਪਰਿਮਿਤਭੋਗਸ੍ਯ ਚਰਮਵਿਚਾਰਸ੍ਯ ਚ ਕਥਾਯਾਂ ਕਥਿਤਾਯਾਂ ਸਤ੍ਯਾਂ ਫੀਲਿਕ੍ਸ਼਼ਃ ਕਮ੍ਪਮਾਨਃ ਸਨ੍ ਵ੍ਯਾਹਰਦ੍ ਇਦਾਨੀਂ ਯਾਹਿ, ਅਹਮ੍ ਅਵਕਾਸ਼ੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਤ੍ਵਾਮ੍ ਆਹੂਸ੍ਯਾਮਿ|
26 ௨௬ மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
ਮੁਕ੍ਤਿਪ੍ਰਪ੍ਤ੍ਯਰ੍ਥੰ ਪੌਲੇਨ ਮਹ੍ਯੰ ਮੁਦ੍ਰਾਦਾਸ੍ਯਨ੍ਤੇ ਇਤਿ ਪਤ੍ਯਾਸ਼ਾਂ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਸ ਪੁਨਃ ਪੁਨਸ੍ਤਮਾਹੂਯ ਤੇਨ ਸਾਕੰ ਕਥੋਪਕਥਨੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
27 ௨௭ இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
ਕਿਨ੍ਤੁ ਵਤ੍ਸਰਦ੍ਵਯਾਤ੍ ਪਰੰ ਪਰ੍ਕਿਯਫੀਸ਼਼੍ਟ ਫਾਲਿਕ੍ਸ਼਼ਸ੍ਯ ਪਦੰ ਪ੍ਰਾਪ੍ਤੇ ਸਤਿ ਫੀਲਿਕ੍ਸ਼਼ੋ ਯਿਹੂਦੀਯਾਨ੍ ਸਨ੍ਤੁਸ਼਼੍ਟਾਨ੍ ਚਿਕੀਰ੍ਸ਼਼ਨ੍ ਪੌਲੰ ਬੱਧੰ ਸੰਸ੍ਥਾਪ੍ਯ ਗਤਵਾਨ੍|