< மாற்கு 9 >

1 பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
ငါအမှန် ဆို သည်ကား၊ ဘုရားသခင် ၏ နိုင်ငံ တော်သည် တန်ခိုး နှင့်တကွတည် ကြောင်းကို ဤ အရပ်၌ ရှိ သောသူ အချို့ တို့သည် မ မြင် မှီသေ ခြင်းသို့ မ ရောက် ရကြ ဟုမိန့် တော်မူ၏။
2 ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார்.
ခြောက် ရက် လွန် သောအခါ ယေရှု သည် ပေတရု ၊ ယာကုပ် ၊ ယောဟန် တို့ကိုခေါ် ၍ ၊ အခြား သူမပါဘဲမြင့် လှစွာသော တောင် ပေါ်တွင်ဆိတ်ကွယ် ရာအရပ်သို့ ဆောင်ကြွ တော်မူ၏။ သူ တို့ရှေ့ ၌ထူးခြားသော အဆင်း အရောင်နှင့် ပြည့်စုံသည်ဖြစ်၍ ၊
3 அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன.
အဝတ် တော်လည်း ပြောင်လက် လျှက်၊ ဤမြေ ၌ အဘယ်ခဝါသည် မျှ မ တတ်နိုင် အောင် မိုဃ်းပွင့်ကဲ့သို့ အလွန် ဖြူ လျက်ရှိ၏။
4 அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
မောရှေ နှင့် ဧလိယ သည် ထင်ရှား ၍ ယေရှု နှင့်အတူ စကားပြောလျက် ရှိ ၏။
5 உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.
ထိုအခါ ပေတရု က အရှင် ဘုရား၊ ဤ အရပ်၌ နေ ဘွယ်ကောင်း ပါ၏။ ကိုယ်တော် ဘို့ တဲတစ် ဆောင်၊ မောရှေ ဘို့တစ် ဆောင်၊ ဧလိယ ဘို့တစ် ဆောင်၊ တဲ သုံး ဆောင်ကို အကျွန်ုပ်တို့ ဆောက်လုပ် ပါရစေဟု လျှောက် လေ ၏။
6 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
တပည့် တော်တို့သည် အလွန်ကြောက် သောကြောင့် ပေတရုသည် ယောင်ယမ်း ၍ ထိုသို့လျှောက် သတည်း။
7 அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.”
ထိုအခါ မိုဃ်းတိမ် သည် သူ တို့ကိုလွှမ်းမိုး ၍ ၊ ဤသူ သည်ငါ ၏ချစ် သား ပေတည်း ။ သူ ၏စကားကို နားထောင် ကြလော့ဟု မိုဃ်းတိမ် က အသံ တော်ဖြစ် လေ၏။
8 திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.
ထိုခဏခြင်း တွင် တပည့်တော်တို့သည် ပတ်လည်သို့ကြည့်ရှု လျှင်၊ မိမိ တို့နှင့်အတူ ယေရှု တယောက်တည်း မှတပါး အဘယ်သူ ကိုမျှ မ မြင် ကြ။
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
တောင် ပေါ် မှဆင်းကြွ သောအခါ ကိုယ်တော်က၊ လူ သား သည် သေ ခြင်းမှ မ ထမြောက် မှီတိုင်အောင်သင်တို့ ယခုမြင် သောအရာ ကို အဘယ်သူ အားမျှ မကြား မပြောကြနှင့်” ဟု တပည့် တော်တို့ကို ပညတ် တော်မူ၏။
10 அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
၁၀တပည့်တော်တို့သည် ထိုစကား ကို မှတ်မိ ၍ သေ ခြင်းမှ ထမြောက် ခြင်းသည် အဘယ်သို့ ဆိုလို သနည်း ဟု အချင်းချင်း ဆွေးနွေးမေးမြန်းကြ ၏။
11 அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள்.
၁၁ထိုအခါ တပည့်တော်တို့က၊ ဧလိယ သည် အရင် လာ မည်ဟု ကျမ်းပြု ဆရာတို့သည် အဘယ်ကြောင့် ဆို ပါသနည်းဟု မေးလျှောက် ကြလျှင် ၊
12 அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்?
၁၂ကိုယ်တော်က၊ ဧလိယ သည် အရင် လာ ၍ အလုံးစုံ တို့ကို ပြုပြင် ရသည် မှန် ပေ၏။ လူ သား သည်လည်း အလွန် ဆင်းရဲ ၍ ကဲ့ရဲ့ ပယ်ထားခြင်းကို ခံရမည်ဟု ကျမ်းစာ လာ၏။”
13 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
၁၃ငါဆို သည်ကား၊ ဧလိယ သည် ရောက် လေပြီ။ သူ ၏အကြောင်း ကို ကျမ်းစာရေး ထားသည်အတိုင်း လူ များသည် သူ့ အားပြုချင် သမျှ ကို ပြု ကြပြီ” ဟုမိန့် တော်မူ၏။
14 அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
၁၄တပည့် တော်တို့ရှိရာ သို့ ရောက် တော်မူသောအခါ များစွာ သောလူ အစုအဝေးသည် သူ တို့ကို ဝိုင်း လျက် ၊ ကျမ်းပြု ဆရာတို့သည် သူ တို့နှင့် ဆွေးနွေး မေးမြန်းကြသည်ကို မြင် တော်မူ၏။
15 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள்.
၁၅စုဝေး လျက်ရှိသော လူအပေါင်း တို့သည် ကိုယ်တော် ကိုမြင် လျှင် ချက်ခြင်း အံ့ဩ မိန်းမောခြင်းရှိလျက် အထံ တော်သို့ ပြေး ၍ နှုတ်ဆက် ကြ၏။
16 இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
၁၆ကိုယ်တော်ကလည်း ၊ သင်တို့သည် သူ တို့နှင့် အဘယ်သို့ ဆွေးနွေး မေးမြန်းကြသနည်း ဟု ကျမ်းပြု ဆရာ တို့ကို မေး တော်မူလျှင်၊
17 மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.
၁၇လူ အစုအဝေး၌ ပါသော သူ တယောက် က၊ အရှင် ဘုရား၊ အ သောနတ် အစွဲခံရ သော အကျွန်ုပ် ၏သား ကို အထံ တော်သို့ ဆောင်ခဲ့ ပါပြီ။
18 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
၁၈နတ်သည် ဘမ်းစား လေ ရာရာ၌ သူ့ ကိုမြေပေါ်မှာလှဲ ၍ ၊ သူ သည်လည်း ခံတွင်း မှ အမြှုတ်ထွက်လျက် ၊ အံသွား ခဲကြိတ် လျက် ၊ ပိန်ခြောက် လျက်နေရပါ၏။ ထိုနတ် ကို နှင်ထုတ် ပါမည်အကြောင်း တပည့် တော်တို့အား အကျွန်ုပ်လျှောက် ၍ သူတို့သည် မ တတ်နိုင် ကြပါဟု လျှောက် သော်၊
19 அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
၁၉ကိုယ်တော်က၊ ယုံကြည် ခြင်းမရှိသောအမျိုး ၊ ငါသည် သင် တို့နှင့်တကွ အဘယ်မျှ ကာလ ပတ်လုံးနေ ရ မည်နည်း။ သင် တို့ကို အဘယ်မျှ ကာလ ပတ်လုံးသည်းခံ ရမည်နည်း။ သူငယ် ကို ငါ့ ထံသို့ ယူခဲ့ ကြ” ဟု မိန့် တော်မူသည်အတိုင်း ၊ယူခဲ့ ကြ၏။
20 எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது.
၂၀ထိုနတ် သည် ကိုယ်တော် ကိုမြင် လျှင် ချက်ခြင်း သူငယ် ကို တောင့်မာ စေသဖြင့် သူငယ်သည် မြေ ပေါ်မှာ လဲ ၍ အမြှုတ် ထွက်လျက် ကိုယ်ကို လှိမ့် လျက်နေ၏။
21 இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான்.
၂၁ကိုယ်တော်ကလည်း၊ ဤသို့ ဖြစ် သည်ကား၊ အဘယ်မျှလောက် ကြာ ပြီနည်း” ဟု သူငယ် ၏အဘ အား မေး တော်မူလျှင် ၊ အဘက၊ ငယ် သောအရွယ်ကပင် ဖြစ်ပါ၏။
22 “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான்.
၂၂သူငယ် ကို သေ စေခြင်းငှာ မီး ၌ ၎င်း ၊ ရေ ၌ ၎င်း အကြိမ်ကြိမ် လဲ စေတတ်၏။ သို့သော်လည်း ကိုယ်တော်သည် တတ်နိုင် တော်မူလျှင် အကျွန်ုပ် တို့ကို သနား ၍ကယ် တော်မူပါဟု လျှောက် လေ၏။
23 அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார்.
၂၃ယေရှု ကလည်း ၊ သင်သည် ယုံကြည်နိုင်သလော။ ယုံကြည် သောသူ ဖြစ် လျှင် ခပ်သိမ်း သောအမှုတို့ကို တတ်နိုင် သည်” ဟု မိန့် တော်မူ၏။
24 உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.
၂၄သူငယ် ၏အဘ သည် ချက်ခြင်း ဟစ်ကြော် ၍ အကျွန်ုပ်ယုံကြည် ပါ၏သခင်။ မယုံကြည် သည်ကို မစ တော်မူပါဟု မျက်ရည်နှင့် လျှောက် ပြန်လေ၏။
25 மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
၂၅ထိုအခါ လူ များတို့သည် စုဝေး လျက် ပြေးလာကြသည်ကို ယေရှု သည်မြင် လျှင်၊ နားပင်း ၍ စကား အ သောနတ် ၊ သူငယ် မှ ထွက် လော့၊ နောက်တစ်ဖန် မဝင် နှင့် ငါ အမိန့် ရှိ၏ ဟု ထိုညစ်ညူး သောနတ် ကို ဆုံးမ ၍ မိန့် တော်မူသဖြင့် ၊
26 அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான்.
၂၆နတ်သည် အော်ဟစ် ၍ အလွန် တောင့်မာ စေပြီးမှ ထွက်သွား ၏။ သူငယ်သည် သေ သကဲ့သို့ ဖြစ် ၏။ သေ ပြီဟု လူများ ဆို ကြ၏။
27 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
၂၇ယေရှု သည် သူ၏ လက် ကိုကိုင် ၍ ချီကြွ တော်မူသဖြင့် သူသည်ထ လေ၏။
28 பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
၂၈အိမ် သို့ ဝင် တော်မူပြီးမှ တပည့် တော်တို့က၊ အကျွန်ုပ် တို့သည် ထိုနတ် ကို အဘယ်ကြောင့် မ နှင်ထုတ် နိုင် ပါသနည်းဟု တိတ်ဆိတ် စွာမေးလျှောက် ကြသော်၊
29 அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
၂၉ကိုယ်တော်က၊ ဆုတောင်း ခြင်း၊ အစာရှောင်ခြင်းမှတစ်ပါး အဘယ်သို့ သောအားဖြင့် ထို နတ်မျိုး သည် မ ထွက် နိုင် ဟု မိန့် တော်မူ၏။
30 அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.
၃၀ထို အရပ်မှထွက် ၍ ဂါလိလဲ ပြည်အလယ်၌ ရှောက်သွား ကြစဉ်တွင်အဘယ်သူ မျှသိ စေခြင်းငှာ အလို တော်မ ရှိ။
31 ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
၃၁အကြောင်းမူကား ၊ လူ သား သည် လူ တို့လက် သို့ အပ်နှံ ခြင်းကို၎င်း ၊ အသေ သတ်ခြင်းကို၎င်းခံရမည်။
32 ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.
၃၂ခံပြီးမှ သုံး ရက်မြောက်သောနေ့ ၌ ထမြောက် လိမ့်မည်ဟူသော အကြောင်းများကို တပည့် တော်တို့အား ပြ တော်မူ၏။ ထိုအကြောင်း များကို သူ တို့သည် နားမလည် သော်လည်း ၊ ကိုယ်တော် ကို မမေး မ လျှောက်ဝံ့ကြ။
33 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.
၃၃ကပေရနောင် မြို့သို့ ရောက် ၍ အိမ် ၌ ရှိ တော်မူလျှင် ၊ သင်တို့သည် လမ်း ၌ အဘယ် အမှုကို အချင်းချင်း ငြင်းခုံ ကြသနည်းဟု မေး တော်မူသည်ကို၊
34 அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள்.
၃၄သူ တို့သည် တိတ်ဆိတ် စွာနေကြ၏။ အကြောင်းမူကား ၊ အဘယ်သူ သည်သာ၍ ကြီးမြတ်အံ့နည်းဟု လမ်း ၌ အချင်းချင်း ငြင်းခုံ ကြ၏။
35 இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார்.
၃၅ထိုအခါ ကိုယ်တော်သည် ထိုင် လျက် တစ်ကျိပ် နှစ်ပါးတို့ကိုခေါ် တော်မူ၍ ၊ အရင် အဦးဖြစ်လို သောသူ မည်သည်ကား နောက်ဆုံး ဖြစ် ရမည်။ အလုံးစုံ တို့၏ အစေခံ လည်း ဖြစ် ရမည်” ဟု မိန့် တော်မူ၏။
36 இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது:
၃၆သူငယ် တစ်ယောက်ကိုလည်း ယူ ၍ သူ တို့အလယ် ၌ ထား ပြီးမှ လက်တော်နှင့်ချီပိုက် လျက်၊
37 “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
၃၇အကြင်သူ သည် ငါ့ မျက်နှာ ကိုထောက်၍ဤကဲ့သို့ သော သူငယ် တစ်စုံတစ်ယောက် ကိုလက်ခံ ၏။ ထိုသူ သည် ငါ့ ကိုပင်လက်ခံ ၏။ ငါ့ ကိုလက်ခံ သောသူ သည်လည်း ငါ့ ကိုသာ လက်ခံ သည်မ ဟုတ်။ ငါ့ ကိုစေလွှတ် တော်မူသောသူ ကိုပင် လက်ခံသည်” ဟု မိန့် တော်မူ၏။
38 அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான்.
၃၈ယောဟန် ကလည်း၊ အရှင် ဘုရား၊ အကျွန်ုပ်တို့နှင့်အတူမလိုက်ဘဲလျက် ကိုယ်တော် ၏နာမ ကို အမှီပြု နတ်ဆိုး တို့ကိုနှင်ထုတ် သောသူတစ် ယောက်ကို အကျွန်ုပ်တို့ တွေ့ပါ၏။ သူသည်အကျွန်ုပ် တို့နှင့်အတူမ လိုက် သောကြောင့် အကျွန်ုပ်တို့သည် မြစ်တား ကြပါသည်ဟု လျှောက် လေသော်၊
39 இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான்.
၃၉ယေရှု က၊ ထိုသူ ကိုမ မြစ်တား ကြနှင့်။ ငါ့ နာမ ကို အမှီပြု လျက် တန်ခိုး ကိုပြ ၍ ငါ့ ကိုအလွယ်တကူ ကဲ့ရဲ့ နိုင် သောသူ တစ်ယောက်မျှ မရှိ ။”
40 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான்.
၄၀သင်တို့၏ရန်သူ ဘက်၌မ ရှိ သောသူ သည် သင်တို့ ဘက် ၌ရှိ ၏။”
41 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார்.
၄၁သင်တို့သည်ခရစ်တော် နှင့် ဆိုင် သည်ဟု ငါ့မျက်နှာကိုထောက်၍အကြင်သူ သည် သင် တို့အား ရေ တခွက် ကိုမျှပေး ၏။ ထိုသူသည် အကျိုး ကို မ ရဘဲမ နေရာ၊ ငါအမှန် ဆို ၏။”
42 யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
၄၂ငါ့ ကို ယုံကြည် သော ဤ သူငယ် တစ်စုံတစ်ယောက် ကို အကြင်သူ သည် မှားယွင်း စေ၏။ ထိုသူသည်လည်ပင်း ၌ ကြိတ်ဆုံ ကျောက်ကိုဆွဲ ၍ ပင်လယ် ၌ ချ ခြင်းကိုခံရလျှင် အနေသာ၍ ကောင်း ၏။”
43 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna g1067)
၄၃သင် ၏လက် သည်သင့် ကိုမှားယွင်း စေလျှင် လက် ကိုဖြတ် လော့။”
44 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. (questioned)
၄၄ပိုးမသေ၊ မီးမငြိမ်းရာ၊ ငရဲ အတွင်း မငြိမ်းနိုင် သော မီး ထဲသို့ လက် နှစ် ဘက်စုံနှင့် ဝင် ရသည်ထက် ၊ လက် ချို့တဲ့ ၍ အသက် ရှင်ခြင်းသို့ ဝင်စား သော် သာ၍ ကောင်း၏။” (Geenna g1067)
45 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna g1067)
၄၅သင် ၏ခြေ သည် သင့် ကိုမှားယွင်း စေလျှင် ခြေ ကိုဖြတ် လော့။”
46 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. (questioned)
၄၆ပိုးမသေ၊ မီးမငြိမ်းရာ၊ ငရဲ အတွင်း မငြိမ်းနိုင်သောမီးထဲသို့ ခြေ နှစ် ဘက်စုံနှင့်ချ ခြင်းကို ခံရသည်ထက် ၊ ခြေ ချို့တဲ့၍ အသက် ရှင်ခြင်းသို့ ဝင်စား သော် သာ၍ ကောင်း၏။” (Geenna g1067)
47 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna g1067)
၄၇သင် ၏မျက်စိ သည်လည်း သင့် ကိုမှားယွင်း စေလျှင် မျက်စိ ကိုထုတ် လော့။”
48 நரகத்தில், “‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’
၄၈ပိုး မ သေ ၊ မီး မ ငြိမ်း ရာ ၊ ငရဲ မီးထဲသို့ မျက်စိ နှစ် ဘက်စုံနှင့်ချ ခြင်းကို ခံရသည်ထက် ၊ မျက်စိ တစ်ဘက်နှင့် ဘုရားသခင် ၏နိုင်ငံ တော်သို့ ဝင်စား သော် သာ၍ ကောင်း၏။” (Geenna g1067)
49 ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள்.
၄၉ယဇ်ကောင်ရှိသမျှတို့၌ ဆားခတ်ရသကဲ့သို့ခပ်သိမ်း သောသူတို့သည် မီး ဆား ခတ်ခြင်းကို ခံရကြမည်။”
50 “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.
၅၀ဆား သည်ကောင်း ၏သို့သော်လည်း အငန် ကင်းပျောက်လျှင် ၊ ငန်သောအရသာ ကို အဘယ်သို့ ရပြန်မည်နည်း။ သင် တို့၌ ဆား ရှိ စေကြလော့။ အချင်းချင်း အသင့်အတင့် နေကြလော့ ဟု မိန့်တော်မူ၏။

< மாற்கு 9 >