< மாற்கு 11 >
1 அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி,
ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଆନିଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍ ଆ ତୁୟାୟ୍ ଜିତବୁରନ୍ ଆ ତୟ୍ତୟ୍ ବେତ୍ପାଗିନ୍ ଡ ବେତନିଆନ୍ ଅଡ଼ୋଏଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ବାଗୁନେ ଏନ୍ନେଲେ ବର୍ରେ ଆପ୍ପାୟେଞ୍ଜି,
2 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
“ମୁକ୍କାଗଡ୍ବେନ୍ ତି ଆ ସାଇ ଇୟ୍ବା, ତେତ୍ତେ ଏଗନେନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ଆନା ଆ ଡଅଙ୍ଲୋଙ୍ ଆଙ୍ଗିୟ୍ ଆନ୍ନିଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ତଙ୍କୁମେ, ତିଅନ୍ତମ୍ ଅବୟ୍ ଆଅନ୍ ଗୋଡୋଁୟନ୍ ଆତବାଡନ୍ ଇୟ୍ତେ ଏଗିଜେ, ତିଆତେ ପଡ୍ଡଙ୍ଲେ ପାଙାୟ୍ବା ।
3 யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
ଆରି, ଆନ୍ନିଙ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇନିବା ଏପଡ୍ଡଙ୍ତେ ଗାମ୍ଲେ ବର୍ରବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କେନ୍ଆତେ ପ୍ରବୁନ୍ ଆସନ୍ ସନାୟ୍ସାୟ୍ ଗାମ୍ଲେ ଇୟ୍ ବର୍ନାବା, ଆନିନ୍ ଆରି ଅନ୍ନବ୍ଡିଙ୍ଲନ୍ ତିଆତେ ତେନ୍ନେ ଲଆପ୍ପାୟ୍ତାୟ୍ ।”
4 அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது,
ଆନିଞ୍ଜି ଜିର୍ରେ ଗରନ୍ନେନ୍ ଆ ତୁୟାୟ୍ ଅବୟ୍ ଅସିଙନ୍ ଆ ଡାଣ୍ଡଲୋଙ୍ ଅବୟ୍ ଆଅନ୍ ଗୋଡୋଁୟନ୍ ଆତବାଡନ୍ ଗିୟ୍ଲେ ତିଆତେ ଇୟ୍ଲେ ପଡ୍ଡଙେଞ୍ଜି,
5 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
ସିଲତ୍ତେ ତେତ୍ତେ ତନଙ୍ଲେ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଲାଙ୍ଲେନ୍ନେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆଅନ୍ ଗୋଡୋଁୟନ୍ ପଡ୍ଡଙ୍ଲେ ଇନି ଏଏଙ୍ଗାତେ?”
6 அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள்.
ଜିସୁନ୍ ଏଙ୍ଗାଲେ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ରେ ଆପ୍ପାୟେଞ୍ଜି, ତିଅନ୍ତମ୍ ଆନିଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ପାଙ୍ବା ଗାମ୍ଲାଜି ।
7 அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார்.
ଜିସୁନ୍ ଆମଙ୍ ଆଅନ୍ ଗୋଡୋଁୟନ୍ ପାଙ୍ଲେ ଆନିଞ୍ଜି ଆ ଡଅଙ୍ଲୋଙନ୍ ଆ ସିନ୍ରିଞ୍ଜି ବେଲେଞ୍ଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଗୋଡୋଁୟନ୍ ଆ ଡଅଙ୍ଲୋଙ୍ ତଙ୍କୁମେନ୍ ।
8 அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.
ଆରି ଜବ୍ର ମନ୍ରାଜି ରୋତ୍ତଲୋଙନ୍ ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ସିନ୍ରି ବେଲେଞ୍ଜି ଆରି ଲାଙ୍ଲେଡ୍ ମନ୍ରାଞ୍ଜି କୋତ୍ତାନ୍ ସିଲଡ୍ ଅଲାନ୍ ଡେୟ୍ଲେ ପାଙ୍ଲେ ରୋତ୍ତଲୋଙନ୍ ବେଲେଞ୍ଜି ।
9 அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!”
ଆରି, ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ ତିକ୍କିଗଡ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବର୍ରଞ୍ଜି, “ଓସାନ୍ନା! ପ୍ରବୁନ୍ ଆ ଆଞୁମ୍ଲୋଙ୍ ଆନା ଜିର୍ତାୟ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ଆସିର୍ବାଦଏତୋ!
10 “வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
ଆପେୟ୍ଲେନ୍ ଦାଉଦନ୍ ଆ ରାଜ୍ୟ ଆଜିର୍ତାଞନ୍ଆତେ ପ୍ରବୁନ୍ ଆସିର୍ବାଦଏତୋ! ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆଡ୍ରକୋତନେନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଓସାନ୍ନା!”
11 இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.
ତିକ୍କି ଜିସୁନ୍ ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ରେ ସରେବାସିଙନ୍ ଇୟ୍ଲାୟ୍ ଗନେ, ଆରି ଏର୍ରେ ଅଡ଼୍କୋନ୍ ଆଙାଙ୍ଡାଲେ ଆସ୍ରାଲ୍ଲୁମେନ୍ ବାରଜଣ ଞଙ୍ନେମରଞ୍ଜି ସରିନ୍ ବେତନିଆନ୍ ଜିରେଞ୍ଜି ।
12 மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார்.
ଆବାର୍ତାନ୍, ଜିସୁନ୍ ଡ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ବେତନିଆନ୍ ସିଲଡ୍ ଜିରୁସାଲମନ୍ ଆୟର୍ରନାଞଞ୍ଜି ଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଡୋଲେଜେନ୍;
13 தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.
ଆରି, ଜିସୁନ୍, ଅଲାନ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ଅବୟ୍ ଲୁଆନୁବନ୍ ସଙାୟ୍ ସିଲଡ୍ ଗିୟ୍ଲେ, ଅସମୟ୍ ତେତ୍ତେ ଆଜନ୍ ଇୟ୍ତେ ଞାଙ୍ନାୟ୍ ଜାଆରୋ ଗାମ୍ଲେ, ଆସାଡାଲନ୍ ଲୁଆନୁବନ୍ ଇୟେନ୍ । ବନ୍ଡ ଆନିନ୍ ତେତ୍ତେ ଜିର୍ରେ ଆ ଅଲାନ୍ ତୁମ୍ ଇୟ୍ଲେ ଞାଙେ, ଇନ୍ନିଙ୍ ଆରି ଅଃନ୍ନିୟ୍ଞାଙ୍ଲୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତି ଆ ବନେଡ଼ା ଲୁଆନୁବନ୍ ଆରଜତେନ୍ ଆ ଡିନ୍ନା ତଡ୍ ।
14 அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଲୁଆନୁବନ୍ ସୟ୍ପଲେ ବର୍ରନେ, “ଆରି ଆଙ୍ଗିୟ୍ ଜା ଆନ୍ନିଙ୍ ଅମଙ୍ନମ୍ ସିଲଡ୍ ଅଜନ୍ ଜୋମ୍ଡଙେ ତଡ୍ ।” ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି କେନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙେଞ୍ଜି । (aiōn )
15 பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ରାଜି, ଆରି ଆନିନ୍ ସରେବାସିଙନ୍ ଗନ୍ଲନ୍ ତେତ୍ତେ, ଜନ୍ତୁଞ୍ଜି ଅନମଙନ୍ ଆସନ୍ ତମ୍ତମ୍ନେମରଞ୍ଜି, ଞିଞିନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ଡୁଙେଞ୍ଜି, ଆରି ବାର୍ବାର୍ଡାବ୍ମରଞ୍ଜି ଆ ମେଜ ଡ କୁକ୍କୁର୍ ବେପାରମରଞ୍ଜି ଆ କୁର୍ସି ସବ୍ଡିଡାଜେନ୍ ।
16 ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
ଆରି ଆନିନ୍, ସରେବାସିଙନ୍ ଆ ଡୁଆରାଗଡ୍ ଇନ୍ନିଙ୍ଜା ତରମ୍ତମଞ୍ଜି ପନାଙନ୍ ଆସନ୍ ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଅଃନ୍ନବ୍ଜିର୍ଜିର୍ରୋ,
17 இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார்.
ଆରି ଆନିନ୍ ଞନଙନ୍ ତିୟ୍ଲେ ବର୍ରନେ, “ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଏନ୍ନେଲେ ଆଇଡିଡନ୍ ଡକୋ, ‘ଅସିଂଞେନ୍ ପୁର୍ତିନ୍ ଅଡ଼୍କୋ ଜାତିନ୍ ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ପାର୍ତନାସିଂ ଗାମ୍ଲେ ବର୍ନେନ୍ ଡେତେ ।’ ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ରାଉମରଞ୍ଜି ଆ ଡଲ୍ଲି ଏଏମ୍ମେଏନ୍ ।”
18 தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ରବ୍ବୁବୋ ଗାମ୍ଲେ ତଙରନ୍ ସାଜେଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆ ଞନଙନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ସାନ୍ନି ଆଡ୍ରେଏଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବତଙେଞ୍ଜି ।
19 மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள்.
ଆରି, ଆସ୍ରାଲ୍ଲୁମେନ୍ ଜିସୁନ୍ ଡ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଗଡ଼ାନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି ।
20 மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள்.
ଡୋତାନ୍, ତି ଆ ତଙର୍ଗଡ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍, ଆନିଞ୍ଜି ଲୁଆନୁବନ୍ ଆଜଡନ୍ ସିଲଡ୍ ଆସର୍ ଇୟ୍ଲେ ଗିଜେଜି ।
21 பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான்.
ତିଆସନ୍ ପିତ୍ରନ୍ ଆମ୍ମୁଙ୍ ଆ ବର୍ନେ ମନ୍ନେଡାଲେ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଗିଜା, ଆମନ୍ ଅଙ୍ଗା ଲୁଆନୁବ୍ ସୟ୍ପଏନ୍, ତିଆତେ ଅସରେନ୍ନି ।”
22 அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள்.
ଜିସୁନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଡର୍ନାବା ।
23 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.
ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଆନାଜନଙ୍ କେନ୍ ବରୁନ୍, ଆମନ୍ ଡୋଲନ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଇୟ୍ ଗଲୋଅମ୍ତୋ ଗାମ୍ଲେ ବର୍ତେ, ଆରି ଆ ଉଗର୍ଲୋଙନ୍ ଏର୍ଡାଲ୍ଗଡ୍ଲେ, ଅଙ୍ଗାତେ ବର୍ତନାୟ୍, ତିଆତେ ଗଡେଲ୍ତେ ଗାମ୍ଲେ ଡର୍ତନେ, ଆନିନ୍ ଆସନ୍ ତିଆତେ ଗଡେଲ୍ତେ ।
24 ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும்.
ତିଆସନ୍, ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଙ୍ଗା ଅଙ୍ଗାତେ ଏପାର୍ତନାତନ୍ ଆରି ଏବେଡ୍ତେ, ତି ଅଡ଼୍କୋନ୍ ଏଞାଙ୍ଲାୟ୍ ଗାମ୍ଲେ ଡର୍ନାବା, ସିଲତ୍ତେ ତି ଅଡ଼୍କୋନ୍ ଏଞାଙ୍ତେ ।
25 நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ପାର୍ତନାନେନ୍ ଆସନ୍ ଏଡୋତନ୍, ଆନ୍ନିଙ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ଇନ୍ନିଙ୍ ଆ ବର୍ନେ ଡକୋଏନ୍ ଡେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ କେମାବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତନେନ୍ ଆପେୟ୍ବେନ୍ ନିୟ୍ ଅଡ଼୍କୋ ଇର୍ସେବେନ୍ କେମାତବେନ୍ ।”
26 அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” என்றார்.
“ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃକ୍କେମାଲୋ ଡେନ୍, ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତନେନ୍ ଆପେୟ୍ବେନ୍ ନିୟ୍ ଇର୍ସେବେଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଅଃକ୍କେମାବେନ୍ ।”
27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
ଜିସୁନ୍ ଡ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆରି ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ରାଜି; ଆରି, ଜିସୁନ୍ ସରେବାସିଙନ୍ ଆବ୍ରୁଲ୍ଲେଏନ୍ ଆଡିଡ୍ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି, ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଡ ପାପୁର୍ମରଞ୍ଜି ଆମଙନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି,
28 அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.
“ଆମନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେନ୍ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତେ? ଆରି କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ଆନା ଆମନ୍ଆଡଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟ୍ଲମ୍?”
29 அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଞେନ୍ ଜାଲଙିଁୟ୍ବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତାୟ୍, ତିଆତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍ ।
30 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
ଜନନ୍ ଆ ତବ୍ବୁବ୍ଡା ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅଡ଼େ ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଡେଏନ୍? ଞେନ୍ ଜାଲଙିଁୟ୍ବା ।”
31 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଡାଲନ୍ ବର୍ରଞ୍ଜି, “ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଏଗାମ୍ଲାୟ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ଗାମ୍ତେ, ‘ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଇନିଜି ବର୍ରନେ ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ଏଃଡ୍ଡର୍ରନେ?’
32 அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ଅଡ଼େ ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଗାମ୍ଲେ ବର୍ନେବୋ ପଙ୍?” ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବତଙେଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଅବୟ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ଗାମ୍ଲେ ମାନ୍ନେଏଞ୍ଜି । ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଏନ୍ନେଲେ ବର୍ନେନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନୋମଙ୍ଲଜି ।
33 எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଜନା ତଡ୍ ।” ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାମେନ୍, “ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଅଙ୍ଗା ଆ ସନୋଡ଼ାନେ ବାତ୍ତେ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଲୁମ୍ତାୟ୍, ତିଆତେ ଞେନ୍ ନିୟ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃବ୍ବର୍ବେନ୍ ।”