< யோவான் 1 >
1 ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
୧ମୂଲୁଏ ବ଼ଲୁ ମାଚେ, ବ଼ଲୁ ମାହାପୂରୁ ତଲେ ମାଚେ, ଏ଼ ବ଼ଲୁଏ ମାହାପୂରୁ ମାଚେସି ।
2 அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
୨ମୂଲୁଏ ଏ଼ ବ଼ଲୁ ମାହାପୂରୁ ତଲେ ମାଚେ ।
3 அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
୩ଏ଼ ବ଼ଲୁ ତଲେ ମାହାପୂରୁ ବାରେ ଗା଼ଡ଼ିକିତେସି; ଅ଼ଡ଼େ ଏ଼ନାୟି ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେ, ଏ଼ ବିତ୍ରାଟି ରଣ୍ତି ଜିକେଏ ଏ଼ ବ଼ଲୁ ପିସ୍ପେ ରା଼ଚି ଆ଼ହା ହିଲେଏ ।
4 அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
୪ଏ଼ ବ଼ଲୁତା ଜୀୱୁ ମାଚେ ଅ଼ଡ଼େ ଏ଼ ଜୀୱୁ ମାଣ୍ସିୟାଁତି ଉଜେଡ଼ି ।
5 அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
୫ଏ଼ ଉଜେଡ଼ି ଆନ୍ଦେରିତା ଡ଼ୀଞ୍ଜିହିଁ ୱା଼ହିମାନେ, ଇଞ୍ଜାଁ ଆନ୍ଦେରି ଏ଼ଦାଆଁ ଏଚେଲା ଜିକେଏ ଅ଼ପାହିଲେଏ ।
6 இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான்.
୬ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ତାନି କାବ୍ରୁ ୱେହ୍ନାଣାଇଁ ପାଣ୍ତାତେସି; ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ।
7 தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
୭ଏ଼ୱାସି ଉଜେଡ଼ିତି କାତା ଲ଼କୁଇଁ ୱେସାଲି ୱା଼ତେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ନିକିହିଁ ବାରେଜା଼ଣା ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ନାମିନେରି, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାସି ସା଼କି ହୀହାଲି ୱା଼ତେସି ।
8 அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
୮ଏ଼ୱାସିଏ ତା଼ନୁଏ ଉଜେଡ଼ି ହିଲାଆତେସି; ସାମା ଏ଼ୱାସି ଏ଼ ଉଜେଡ଼ିତି କାତା ୱେସାଲି ୱା଼ତେସି ।
9 உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம்.
୯ଏମିନି ସାତା ଉଜେଡ଼ି ବାରେ ଲ଼କୁକି ଉଜେଡ଼ି ହୀନେ, ଏ଼ୱାସି ଦାର୍ତିତା ୱା଼ତେସି ।
10 அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை.
୧୦ଏ଼ୱାସି ଦାର୍ତିତା ମାଚେସି ଅ଼ଡ଼େ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଦାର୍ତି ବାରେ ରା଼ଚି ଆ଼ତେ, ଆ଼ତିଜିକେଏ ଈ ଦାର୍ତି ଏ଼ୱାଣାଇଁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡାଆତେ ।
11 அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
୧୧ଏ଼ୱାସି ତାନି ରା଼ଜିତା ୱା଼ତେସି, ଆ଼ତିଜିକେଏ ତାନି ଜାହାରା ଲ଼କୁ ଏ଼ୱାଣାଇଁ ଆବାଆତେରି ।
12 ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
୧୨ଆମ୍ବାଆରି ଏ଼ୱାଣାଇଁ ଆବିତେରି ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ତା଼ଣା ନାମିତେରି; ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ ମାହାପୂରୁତି ମୀର୍କା ମା଼ସ୍କା ଆ଼ହାଲି ଅଦିକାରା ହୀତେସି ।
13 இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
୧୩ମାଣ୍ସିତି ତାଞ୍ଜିୟାଁ ତା଼ଣାଟି ଜାର୍ନା ଆ଼ତାକି ଏ଼ୱାରି ମାହାପୂରୁତି ମୀର୍କା ଆ଼ହାହିଲଅରି, ମାହାପୂରୁ ତା଼ନୁଏ ଏ଼ୱାରି ତାଞ୍ଜି ଆ଼ତେସି ।
14 வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
୧୪ଅ଼ଡ଼େ, ଏ଼ ବ଼ଲୁ ମାଣ୍ସି ୱା଼ଣା ଆ଼ତେ, ମାହାପୂରୁତି କାର୍ମା ଇଞ୍ଜାଁ ସାତା ତଲେ ମା଼ ତା଼ଣା ବାସା କିତେସି, ଅ଼ଡ଼େ ଆ଼ବା ତା଼ଣାଟି ୱା଼ହାମାନି ରଣ୍ତିଏ ମୀର୍ଏଣାତି ଗାୱୁରମି ଲେହେଁ ମା଼ର ଏ଼ୱାଣି ଗାୱୁରମି ମେସ୍ତାୟି ।
15 யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.”
୧୫ଜହନ ଏ଼ୱାଣି କାତାତି ସା଼କି ହୀହାନା କାଜା ଗିୟାଁତଲେ ଏଲେଇଚେସି, “ଆମ୍ବାଆସି ନା଼ ଡା଼ୟୁ ୱା଼ହିମାନେସି, ଏ଼ୱାସି ନା଼ କିହାଁ କାଜାସି, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାସି ନା଼ନୁ ଜାର୍ନାଆ଼ତି ନ଼କେଏ ମାଚେସି, ଇଞ୍ଜିଁ ଏ଼ୱାଣି କାତା ନା଼ନୁ ତଲିଏ ଏଲେଇଞ୍ଜି ୱେସାମାଞ୍ଜାତେଏଁ, ଏ଼ୱାସିଏ ଈୱାସି ।”
16 அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
୧୬ଏ଼ଦାଆଁତାକି ତା଼ନୁ ପୂରା କିନି ତା଼ଣାଟି ମା଼ର ବାରେ ଜା଼ଣାତାୟି ବାରେ ବେଟାଆ଼ହାନା, କାର୍ମା ମୁହେଁ କାର୍ମାମେହ୍ନାଣି ବେଟାଆ଼ହାମାନାୟି ।
17 ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
୧୭ମାହାପୂରୁ ମ଼ସା ତା଼ଣାଟି ମେ଼ରା ହିୟାତେସି, ସାମା ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣାଟି କାର୍ମାମେହ୍ନାୟି ଅ଼ଡ଼େ ସାତା ୱା଼ତେ ।
18 இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
୧୮ଆମ୍ବାଆସି ଏଚେଲା ମାହାପୂରୁଇଁ ମେସାହିଲଅସି, ତାନିତଲେ ମାନି ରଣ୍ତିଏ ମୀର୍ଏସି ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ଆ଼ବାଇଁ ପୁଣ୍ମ୍ବି କିହାମାଞ୍ଜାନେସି ।
19 எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே:
୧୯ନୀନୁ ଆମ୍ବାଆତି ଇଞ୍ଜିଁ ଜହନଇଁ ୱେଞ୍ଜାଲି ଜୀହୁଦିୟାଁ ଏଚିବେ଼ଲା ଜିରୁସାଲମଟି କାଜା ପୂଜେରାଙ୍ଗା ଇଞ୍ଜାଁ ଲେ଼ବିୟଙ୍ଗାଣି ଜହନ ତା଼ଣା ପାଣ୍ତିତେରି, ଏ଼ୱାସି ଈ କାତା ୱେସ୍ତେସି ।
20 “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
୨୦ଜହନ ସାତା କାତା ୱେସ୍ତେସି, ଆ଼ଏ ଇଞ୍ଜିଁ ଇନାଆତେସି, ତୀର୍ପୁତଲେ ୱେସ୍ତେସି, “ନା଼ନୁ ମସିହା ଆ଼ଏ ।”
21 அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
୨୧ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ୱେଚେରି, ଆତିହିଁ “ନୀନୁ ଆମ୍ବାଆତି? ନୀନୁ ଏ଼ନାଆଁ ଏଲିୟତି କି?” ଜହନ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଏଲିୟତେଏଁ ଆ଼ଏ ।” ଏ଼ୱାରି ୱେଚେରି, “ନୀନୁ ଏ଼ନାଆଁ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାତି କି?” ଏ଼ୱାସି ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଆ଼ଏ ।”
22 இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
୨୨ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେରି, “ମାଙ୍ଗେ ୱେସ୍ତାମୁ, ମା଼ମ୍ବୁ ମାଙ୍ଗେ ପାଣ୍ତା ମାଞ୍ଜାନାରାଇଁ ଏ଼ନି କାତା ୱେହ୍ନମି । ନୀନୁ ଆମ୍ବାଆତେଏଁ ଇଞ୍ଜିଁ ୱେସାକଡିମାଞ୍ଜି?”
23 யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
୨୩ଜହନ ଏଲେଇଚେସି, “ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନି ଜିସାୟ ଏ଼ନିକିଁ ଜ଼ଲାମାଚେସି, ‘ନା଼ନୁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା କାଜା ଗିୟାଁତଲେ କା଼ଲୱି ଆ଼ହିମାନି ରଅଣି ହା଼ଡାଲେହେଁ ତାତେଏଁ, ପ୍ରବୁତି ଜିରୁ ସଲ୍କେ କିଦୁ ।’”
24 பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
୨୪ଅ଼ଡ଼େ, ପାରୁସିୟାଁ ବିତ୍ରାଟି ଏଚରଜା଼ଣା ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାଚେରି,
25 யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
୨୫ଏ଼ୱାରି ଜହନଇଁ ୱେଚେରି, “ନୀନୁ କ୍ରୀସ୍ତ କି ଏଲିୟ କି ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାତି ଆ଼ଏ, ଆତିହିଁ ନୀନୁ ଏ଼ନାଆଁତାକି ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାଞ୍ଜି?”
26 யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
୨୬ଜହନ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଏ଼ୟୁତା ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାଇଁ; ଆମ୍ବାଆରାଇଁ ମୀରୁ ପୁଞ୍ଜାହିଲଅତେରି, ଏ଼ୱାସି ମୀ ବିତ୍ରା ମାନେସି ।
27 அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
୨୭ଏ଼ୱାସି ନା଼ ଡା଼ୟୁ ୱା଼ହିମାନେସି, ନା଼ନୁ ଏ଼ୱାଣି ସେପୁୟାଁତି ଡ଼଼ର୍କା ଜିକେଏ ହୁକ୍ହାଲି ଜ଼ଗେ ଆ଼ଏ ।”
28 இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
୨୮ଏମିନି ଜର୍ଦନ କାଡାତି ୱେ଼ଡ଼ା ହ଼ପୁୱାକିତି ବେତନିୟାଁତା ଜହନ ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାଚେସି, ଏ଼ ଟା଼ୟୁତା ଈ ବାରେ ଆ଼ହାମାଚେ ।
29 மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
୨୯ଏ଼ ଅ଼ର ନେ଼ଚୁ ଜହନ ଜୀସୁଇଁ ତାନି ୱାକି ୱା଼ହିମାନାଣି ମେସାନା ଏଲେଇଚେସି, “ସିନିକିଦୁ ମାହାପୂରୁତି ମେ଼ଣ୍ତା ଡା଼ଲୁ, ଆମିନିଗାଟାସି ଈ ଦାର୍ତିତି ପା଼ପୁ ବାରେ ଡେ଼କା ଅ଼ନେସି ।
30 ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன்.
୩୦ଈୱାସିଏ ଏ଼ୱାସି, ଆମ୍ବାଆରି କାତା ନା଼ନୁ ୱେସାମାଞ୍ଜାତେଏଁ, ‘ର଼ ମାଣ୍ସି ନା଼ ଡା଼ୟୁ ୱା଼ହିମାନେସି, ସାମା ଏ଼ୱାସି ନା଼ କିହାଁ କାଜାସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ନା଼ନୁ ଜାର୍ନାଆ଼ତି ନ଼କେଏ ମାଚେସି ।’
31 நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
୩୧ନା଼ନୁ ଜିକେଏ ଏ଼ୱାଣାଇଁ ପୁଞ୍ଜା ହିଲାଆତେଏଁ, ସାମା ଏ଼ୱାସି ଏ଼ନିକିହିଁ ଇସ୍ରାୟେଲ ଲ଼କୁ ନ଼କିତା ତ଼ଞ୍ଜାଆ଼ନେସି, ଈଦାଆଁତାକି ନା଼ନୁ ଏ଼ୟୁତା ବାପ୍ତିସ୍ମ ହୀହାଲି ୱା଼ହାମାଇଁ ।”
32 பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன்.
୩୨ଅ଼ଡ଼େ ଜହନ ସା଼କି ହୀହାନା ୱେସ୍ତେସି, “ନା଼ନୁ ସୁଦୁଜୀୱୁ ପା଼ର୍ୱା ପଟାଲେହେଁ ଲାକପୂରୁଟି ରେ଼ଚା ୱା଼ହିମାନାଣି ମେସ୍ତେଏଁ, ଇଞ୍ଜାଁ ଏ଼ଦି ଏ଼ୱାଣିଲାକ କୁଗିତେ ।
33 தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார்.
୩୩ନା଼ନୁ ଜିକେଏ ଏ଼ୱାଣାଇଁ ପୁଞ୍ଜା ହିଲାଆତେଏଁ, ସାମା ଆମ୍ବାଆସି ନାଙ୍ଗେ ଏ଼ୟୁତା ବାପ୍ତିସ୍ମ ହୀହାଲି ପାଣ୍ତାମାଞ୍ଜାନେସି, ଏ଼ୱାସି ନାଙ୍ଗେ ୱେସ୍ତାତେସି, ‘ଆମିନିଗାଟାଣି ଲାକ ସୁଦୁଜୀୱୁ ରେ଼ଚା ୱା଼ନାଣି ଅ଼ଡ଼େ କୁଗିନାଣି ମେହ୍ଦି, ଆମ୍ବାଆସି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ବାପ୍ତିସ୍ମ ହୀନେସି, ଏ଼ୱାସି ଏ଼ ମାଣ୍ସି ।’”
34 இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
୩୪ଜହନ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଏ଼ଦାଆଁ ମେସାମାଇଁ, ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ମିଙ୍ଗ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ମୀର୍ଏସି ।”
35 மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
୩୫ତାନି ଅ଼ର ନେ଼ଚୁ ଜହନ ତାନି ରୀ ସୀସୁୟାଁ ତଲେ ନିଚାମାଚେସି;
36 இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
୩୬ଏ଼ୱାସି ଜୀସୁଇଁ ଏ଼ ଜିରୁଟି ହାଜିମାନାଣି ମେସାନା ଏଲେଇଚେସି, “ସିନିକିଦୁ ମାହାପୂରୁତି ମେ଼ଣ୍ତା ଡା଼ଲୁ!”
37 அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
୩୭ଏ଼ ରୀ ସୀସୁୟାଁ ଏ଼ୱାଣି ହା଼ଡା ୱେଞ୍ଜାନା ଜୀସୁ ଜେ଼ଚ ଜେ଼ଚ ହାଚେରି ।
38 இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
୩୮ଜୀସୁ ୱେଣ୍ଡେ ତିର୍ୱାନା ଏ଼ୱାରାଇଁ ତାନି ଜେ଼ଚ ଜେ଼ଚ ହାଜିମାନାଣି ମେସାନା ୱେଚେସି, “ମୀରୁ ଏ଼ନାଆଁ ପାରିମାଞ୍ଜେରି?” ଏ଼ୱାରି ୱେଚେରି, “ରାବି ନୀନୁ ଆମ୍ବିୟା ଡ଼ୟିମାଞ୍ଜି?”
39 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
୩୯ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, ୱା଼ଦୁ, ମେହ୍ଦେରି । ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ହାଜାନା ତାନି ଡ଼ୟିନି ଟା଼ୟୁ ମେସ୍ତେରି, ଇଞ୍ଜାଁ, ଏ଼ ଦିନା ଏ଼ୱାଣିତଲେ ଡ଼ୟିତେରି; ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏଚିବେ଼ଲା ଲା଼ଇତି ଦସ ଗଂଟା ଆ଼ହାମାଚେ ।
40 யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
୪୦ଜହନତି କାତା ୱେଞ୍ଜାନା ଆମିନି ରିଆରି ଜୀସୁ ଜେ଼ଚ ଜେ଼ଚ ହାଜାମାଚେରି, ଏ଼ୱାରି ବିତ୍ରା ରଅସି ସିମନ ପିତରତି ତାୟି ଆନ୍ଦ୍ରିୟ ମାଚେସି ।
41 அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
୪୧ଏ଼ୱାସି ତଲିଏ ତାନି ତାୟି ସିମନଇଁ ମେସାନା ଏଲେଇଚେସି, “ମା଼ମ୍ବୁ ମସିହାଇଁ ମେସ୍ତମି ।”
42 அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
୪୨ଆନ୍ଦ୍ରିୟ ସିମନଇଁ ଜୀସୁ ତା଼ଣା ତାତେସି । ଜୀସୁ ଏ଼ୱାଣାଇଁ ଆଟେ ସିନିକିହାନା ଏଲେଇଚେସି, “ନୀନୁ ଜହନ ମୀର୍ଏଣା ସିମନତି । ନୀନୁ କେ଼ପା ଦ଼ରୁଟି ୱେ଼ଙ୍ଗିଦି ।”
43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
୪୩ଅ଼ର ନେ଼ଚୁ ଜୀସୁ ଗାଲିଲିତା ହାଜାଲି ଅଣ୍ପିତେସି, ଏ଼ୱାସି ପିଲିପଇଁ ମେସାନା ଏଲେଇଚେସି, “ନା଼ ଜେ଼ଚ ୱା଼ମୁ!”
44 அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
୪୪ପିଲିପ ବେତ୍ସାୟିଦା ଗା଼ଡ଼ାତାସି ମାଚେସି, ଏ଼ଦି ଆନ୍ଦ୍ରିୟ ଇଞ୍ଜାଁ ପିତରତି ଗା଼ଡ଼ା ମାଚେ ।
45 பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
୪୫ପିଲିପ ନିତନିୟେଲଇଁ ମେସାନା ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଆମ୍ବାଆରି କାତା ମ଼ସାତି ମେ଼ରାତା ରା଼ଚାମାନେରି, ଅ଼ଡ଼େ, ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାରି ଜିକେଏ ରା଼ଚାମାନେରି, ମା଼ମ୍ବୁ ଏ଼ୱାଣାଇଁ ବେଟାଆ଼ହାମାନମି । ଏ଼ୱାସି ଜସେପ ମୀର୍ଏସି ନା଼ଜରିତତି ଜୀସୁ ।”
46 நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
୪୬ନିତନିୟେଲ ଏ଼ୱାଣାଇଁ ୱେଚେସି, “ନା଼ଜରିତତା କି ଏ଼ନି ନେହିଁ କାମା ଆ଼ହିମାନେ?” ପିଲିପ ଏଲେଇଚେସି, “ୱା଼ହାନା ସିନିକିମୁ ।”
47 அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
୪୭ଜୀସୁ ନିତନିୟେଲଇଁ ତାନି ତା଼ଣା ୱା଼ହିମାନାଣି ମେସାନା ଜୀସୁ ଏ଼ୱାଣି କାତା ୱେସ୍ତେସି, “ମେହ୍ଦୁ ଈୱାସି ସାତା ତଲେ ଇସ୍ରାୟେଲତି ଲ଼କୁ; ଈୱାଣି ତା଼ଣା ଏ଼ନାୟି ନା଼ଡ଼ିକିନି ବୁଦି ହିଲେଏ!”
48 அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
୪୮ନିତନିୟେଲ ଜୀସୁଇଁ ୱେଚେସି, “ନୀନୁ ନାଙ୍ଗେ ଏ଼ନିକିହିଁ ପୁଞ୍ଜାତି?” ଜୀସୁ ଏଲେଇଚେସି, “ପିଲିପ ନିଙ୍ଗେ ହା଼ଟାତି ନ଼କେଏ ନୀନୁ ତ଼ୟା ମା଼ର୍ନୁ ଡ଼଼ଇ ମାଚି, ଏଚେ଼ତା ନା଼ନୁ ନିଙ୍ଗ ମେସାମାଞ୍ଜାତେଏଁ ।”
49 அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
୪୯ନିତନିୟେଲ ଏଲେଇଚେସି, “ଏ଼ ଗୂରୁ ନୀନୁ ମାହାପୂରୁ ମୀର୍ଏଣାତି! ନୀନୁଏ ଇସ୍ରାୟେଲ ରାଜାତି ।”
50 அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார்.
୫୦ଜୀସୁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ନିଙ୍ଗେ ତ଼ୟା ମା଼ର୍ନୁ ଡ଼଼ଇ ମେସ୍ତାତେଏଁ ଇଞ୍ଜିଁ ୱେସାଲିଏ ନୀନୁ ନାମିମାଞ୍ଜି?” ନୀନୁ ଈଦାଆଁ କିହାଁ ହା଼ରେକା କାଜା କାମାୟାଁ ମେହ୍ଦି ।
51 அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
୫୧ଜୀସୁ ନିତନିୟେଲଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ନିଙ୍ଗେ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ ନୀନୁ ଲାକପୂରୁ ଦେପିଆ଼ହାମାନାଣି ଇଞ୍ଜାଁ ମାଣ୍ସି ମୀର୍ଏଣା ତା଼ଣା ମାହାପୂରୁତି ଦୂତୁୟାଁ ଲାକ ହାଜିମାନାଣି ଅ଼ଡ଼େ ଡ଼଼ଇ ୱା଼ହିମାନାଣି ମେହ୍ଦି ।”