< Psalm 129 >

1 Israel, srumun luman akkeok lun mwet lokoalok nu suwos Oe ke kowos fusr ah me.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;
2 “Oe ke nga fusr ah me nwe inge, Mwet lokoalok luk elos akkeokyeyu arulana upa, Tusruktu elos tiana kutangyula.
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
3 Elos kanteya fintukuk arulana loal Oana ke elos pikin acn in orek ima lalos uh.
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4 Tusruktu LEUM GOD, su arulana suwoswos, El aksukosokyeyula liki moul in kohs.”
ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
5 Lela tuh elos nukewa su srunga Zion In kutangyukla ac lillilyak.
சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
6 Lela tuh elos in oana mah su yoki oan fin mangon lohm uh, Su paola ac tia ku in kapak.
அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
7 Wangin mwet sifelosyak inpaolos, Ku losani ac usla.
அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
8 Wangin mwet su fahsr alukela acn se inge fah fahk, “Lela God Elan akinsewowoye kom! Kut akinsewowoye kom ke Inen LEUM GOD.”
வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.

< Psalm 129 >