< Mariko 2 >
1 Matukũ manini maathira, Jesũ agĩcooka Kaperinaumu rĩngĩ, nao andũ makĩigua atĩ nĩoka mũciĩ.
சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.
2 Nĩ ũndũ ũcio andũ aingĩ makĩũngana nginya hakĩaga handũ ha gũikarwo, o na nginya nja ya mũrango, nake akĩmahunjĩria ũhoro.
எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.
3 Nĩhookire andũ, makĩmũrehera mũndũ warũarĩte mũrimũ wa gũkua ciĩga, akuuĩtwo nĩ andũ ana.
அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.
4 Na tondũ matingĩahotire kũmũkinyia harĩa Jesũ aarĩ nĩ ũndũ wa ũingĩ wa andũ-rĩ, magĩtharũria nyũmba igũrũ wa hau Jesũ aarĩ na maarĩkia kũhatharia, makĩharũrũkia mũndũ ũcio wakuĩte ciĩga arĩ kĩbarĩ-inĩ kĩu aakomeire.
ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
5 Rĩrĩa Jesũ oonire wĩtĩkio wao, akĩĩra mũndũ ũcio wakuĩte ciĩga atĩrĩ, “Mũriũ, nĩwarekerwo mehia maku.”
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6 Na rĩrĩ, arutani amwe a watho maarĩ ho, nao makĩĩyũria na ngoro atĩrĩ,
அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
7 “Mũndũ ũyũ ekwaria ũguo nĩkĩ? Nĩ araruma Ngai! Nũũ ũngĩ ũngĩhota kũrekanĩra mehia tiga Ngai wiki?”
“இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
8 O rĩmwe Jesũ akĩmenya thĩinĩ wa roho wake atĩ ũguo nĩguo meciiragia ngoro-inĩ ciao, nake akĩmooria atĩrĩ, “Nĩ kĩĩ gĩgũtũma mwĩciirie maũndũ macio ngoro-inĩ cianyu?
உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
9 Nĩ ũndũ ũrĩkũ mũhũthũ: kwĩra mũndũ ũyũ ũkuĩte ciĩga atĩrĩ, ‘Nĩ warekerwo mehia maku,’ kana kũmwĩra atĩrĩ, ‘Ũkĩra woe kĩbarĩ gĩaku wĩtware’?
நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார்.
10 No nĩgeetha mũmenye atĩ Mũrũ wa Mũndũ arĩ na ũhoti gũkũ thĩ wa kũrekanĩra mehia-rĩ ….” Akĩĩra mũndũ ũcio wakuĩte ciĩga atĩrĩ,
ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன்.
11 “Ndakwĩra atĩrĩ, ũkĩra, oya kĩbarĩ gĩaku ũinũke mũciĩ.”
பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
12 Nake agĩũkĩra, akĩoya kĩbarĩ gĩake, agĩĩthiĩra andũ othe mamwĩroreire. Ũndũ ũcio ũgĩtũma andũ othe magege, nao makĩgooca Ngai, makiuga atĩrĩ, “Kaĩ tũtirĩ tuona ũndũ ta ũyũ-ĩ!”
உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
13 O rĩngĩ Jesũ nĩoimagarire agĩthiĩ hũgũrũrũ-inĩ cia iria; nakĩo kĩrĩndĩ kĩnene gĩgĩũka kũrĩ we, nake akĩambĩrĩria gũkĩruta ũhoro.
மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
14 Na hĩndĩ ĩrĩa aahĩtũkaga, akĩona Lawi mũrũ wa Alufayo aikarĩte harĩa heetagĩrio mbeeca cia igooti. Jesũ akĩmwĩra atĩrĩ, “Nũmĩrĩra,” nake Lawi agĩũkĩra akĩmũrũmĩrĩra.
பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
15 Na rĩrĩa Jesũ aarĩĩaga irio cia hwaĩ-inĩ nyũmba kwa Lawi, etia mbeeca cia igooti aingĩ na ehia nĩmarĩĩanĩire nake na arutwo ake, tondũ maarĩ aingĩ nĩmamũrũmĩrĩire.
இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
16 Rĩrĩa arutani a watho arĩa maarĩ Afarisai moonire akĩrĩĩanĩra na andũ ehia na etia mbeeca cia igooti, makĩũria arutwo ake atĩrĩ, “Arĩĩanagĩra na etia mbeeca cia igooti na ehia nĩkĩ?”
பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
17 Nake Jesũ aigua ũguo akĩmeera atĩrĩ, “Andũ arĩa agima mĩĩrĩ ti o mabataragio nĩ ndagĩtarĩ, no nĩ arĩa arũaru. Ndiokire gwĩta andũ arĩa athingu, no nĩ arĩa ehia.”
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
18 Na rĩrĩ, arutwo a Johana na Afarisai nĩmehingĩte kũrĩa irio. Andũ amwe magĩũka makĩũria Jesũ atĩrĩ, “Nĩkĩ gĩtũmaga arutwo a Johana na arutwo a Afarisai mehinge kũrĩa irio, no arutwo aku matiĩhingaga?”
அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
19 Nake Jesũ akĩmacookeria atĩrĩ, “Ageni a mũhikania mangĩĩhinga kũrĩa irio atĩa rĩrĩa arĩ hamwe nao? Matingĩhinga rĩrĩa rĩothe marĩ hamwe nake.
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
20 No ihinda nĩrĩgakinya rĩrĩa mũhikania akeeherio kuuma kũrĩ o, na hĩndĩ ĩyo nĩmakehinga kũrĩa irio.”
ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
21 “Gũtirĩ mũndũ wĩkagĩra nguo ngũrũ kĩraka kĩerũ. Angĩĩka ũguo, kĩraka kĩu kĩerũ no kĩguucie nguo ĩyo ngũrũ, nakĩo gĩtũme hau hatarũku hatũrĩke makĩria.
“யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
22 Ningĩ gũtirĩ mũndũ wĩkĩraga ndibei ya mũhihano mondo-inĩ ngũrũ. Angĩĩka ũguo, ndibei ĩyo no ĩtarũre mondo icio, nayo ndibei ĩyo ĩitĩke, nacio mondo ithũke. No rĩrĩ, ndibei ya mũhihano ĩĩkĩragwo thĩinĩ wa mondo njerũ.”
யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
23 Na mũthenya ũmwe warĩ wa Thabatũ-rĩ, Jesũ nĩatuĩkanĩirie mĩgũnda-inĩ ya ngano. Na rĩrĩa aathiiaga arĩ hamwe na arutwo ake, arutwo makĩambĩrĩria gũtua ngira cia ngano.
ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
24 Nao Afarisai makĩmwĩra atĩrĩ, “Ta rora, nĩ kĩĩ kĩratũma arutwo aku meke ũrĩa watho ũtetĩkĩrĩtie mũthenya wa Thabatũ?”
பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
25 Nake akĩmacookeria atĩrĩ, “Kaĩ mũtarĩ mwathoma ũrĩa Daudi we mwene na arĩa maarĩ nake meekire rĩrĩa maarĩ ahũtu na makabatario nĩ gĩa kũrĩa?
இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
26 Aatoonyire nyũmba ya Ngai rĩrĩa Abiatharu aarĩ mũthĩnjĩri-Ngai ũrĩa mũnene, akĩrĩa mĩgate ĩrĩa yamũrĩirwo Ngai, o ĩrĩa yetĩkĩrĩtio kũrĩĩagwo nĩ athĩnjĩri-Ngai oiki. Na agĩcooka akĩhe arĩa maarĩ nake ĩmwe yayo.”
அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
27 Ningĩ akĩmeera atĩrĩ, “Mũthenya wa Thabatũ wekĩrirwo ho nĩ ũndũ wa mũndũ, no mũndũ ndombirwo nĩ ũndũ wa Thabatũ.
பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
28 Nĩ ũndũ ũcio, Mũrũ wa Mũndũ nĩ Mwathani o na wa mũthenya wa Thabatũ.”
அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.