< Luka 9 >
1 Na rĩrĩ, Jesũ aarĩkia gwĩta arutwo arĩa ikũmi na eerĩ hamwe, nĩamaheire hinya na ũhoti wa kũingata ndaimono ciothe na kũhonia mĩrimũ,
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார்.
2 na akĩmatũma mathiĩ makahunjie ũhoro wa ũthamaki wa Ngai na mahonagie andũ arĩa arũaru.
அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார்.
3 Nake akĩmeera atĩrĩ, “Mũtigakuue kĩndũ o nakĩ kĩa rũgendo; mũtigakuue mũtirima, kana mũhuko, kana irio, kana mbeeca o na kana nguo tiga o iria mwĩhumbĩte.
இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம்.
4 Nyũmba ĩrĩa yothe mũrĩtoonyaga ikaragai kuo nginya rĩrĩa mũkoima itũũra rĩu.
நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள்.
5 Andũ mangĩkaarega kũmũnyiita ũgeni-rĩ, mũkaaribariba magũrũ manyu rũkũngũ rũitĩke mũkiuma itũũra rĩao arĩ ũira wa kũmatuĩra ciira.”
அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார்.
6 Nĩ ũndũ ũcio makiumagara magĩthiĩ kuuma gatũũra kamwe nginya karĩa kangĩ makĩhunjagia Ũhoro-ũrĩa-Mwega na makĩhonagia andũ kũrĩa guothe maathiiaga.
அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள்.
7 Na rĩrĩ, rĩrĩa Herode ũrĩa mũthamaki aiguire ũhoro wa maũndũ mothe marĩa maathiiaga na mbere, nĩataangĩkire ngoro mũno tondũ andũ amwe moigaga atĩ Johana nĩariũkĩte kuuma kũrĩ arĩa akuũ,
சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான்.
8 na angĩ makoiga atĩ Elija nĩonekanĩte, o na angĩ makoiga atĩ mũnabii ũmwe wa arĩa a tene nĩariũkĩte.
வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
9 No Herode akiuga atĩrĩ, “Johana nĩndamũrengithirie mũtwe. Ũyũ ndĩraigua ũhoro wake-rĩ, nĩwe ũ?” Nake akĩĩrirĩria kũmuona.
ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான்.
10 Nao atũmwo maacooka, makĩĩra Jesũ maũndũ marĩa mekĩte. Nake akĩehera kuo, agĩthiĩ nao itũũra rĩetagwo Bethisaida,
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார்.
11 no andũ aingĩ makĩmenya ũhoro ũcio na makĩmũrũmĩrĩra. Nake akĩmaamũkĩra na akĩmahe ũhoro wa ũthamaki wa Ngai, na akĩhonia arĩa maabatarĩtio nĩ kũhonio.
ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12 Hwaĩ-inĩ arutwo arĩa ikũmi na eerĩ magĩũka kũrĩ we makĩmwĩra atĩrĩ, “Ingata andũ aya nĩguo mathiĩ mĩciĩ ĩrĩa ĩrĩ hakuhĩ o na mĩgũnda-inĩ mageethe irio na gwa gũkoma, tondũ haha tũrĩ nĩ werũ ũtarĩ andũ.”
மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள்.
13 Nake akĩmacookeria atĩrĩ, “Maheei kĩndũ gĩa kũrĩa.” Nao makĩmwĩra atĩrĩ, “Tũrĩ o na mĩgate ĩtano na thamaki igĩrĩ, no tũthiire tũkagũrĩre andũ aya othe irio.”
அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள்.
14 (Handũ hau haarĩ na arũme ta ngiri ithano.) Nowe akĩĩra arutwo ake atĩrĩ, “Maikariei thĩ marĩ ikundi cia andũ mĩrongo ĩtano ĩtano.”
அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார்.
15 Nao arutwo magĩĩka o ũguo, magĩikaria andũ othe thĩ.
சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.
16 Nake akĩoya mĩgate ĩyo ĩtano na thamaki icio igĩrĩ, akĩrora na igũrũ, agĩcookia ngaatho na agĩcienyũranga. Agĩcooka agĩcinengera arutwo ake magaĩre andũ.
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
17 Othe makĩrĩa makĩhũũna, nao arutwo makĩiyũria ciondo ikũmi na igĩrĩ cia cienyũ iria ciatigarire.
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
18 Na rĩrĩ, hĩndĩ ĩmwe Jesũ akĩhooya arĩ keheri-inĩ, arutwo ake magĩkorwo marĩ hamwe nake. Akĩmooria atĩrĩ, “Andũ moigaga niĩ nĩ niĩ ũ?”
ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
19 Nao makĩmũcookeria atĩrĩ, “Amwe moigaga nĩwe Johana Mũbatithania; angĩ makoiga nĩwe Elija; angĩ nao makoiga atĩ mũnabii ũmwe wa arĩa a tene nĩariũkĩte.”
அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
20 Nake akĩmooria atĩrĩ, “Inyuĩ na inyuĩ-rĩ, mugaga atĩa? Mugaga niĩ nĩ niĩ ũ?” Petero akĩmũcookeria atĩrĩ, “Wee nĩwe Kristũ ũrĩa wa Ngai.”
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.
21 Nake Jesũ akĩmakaania na hinya, akĩmeera matikeere mũndũ o na ũrĩkũ ũhoro ũcio.
இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.
22 Nake akiuga atĩrĩ, “Mũrũ wa Mũndũ no nginya one mathĩĩna maingĩ, na aregwo nĩ athuuri, na athĩnjĩri-Ngai arĩa anene, o na arutani a watho, na no nginya ooragwo na thuutha wa mĩthenya ĩtatũ ariũkio.”
பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார்.
23 Agĩcooka akĩmeera othe atĩrĩ, “Mũndũ o wothe ũngĩenda kũnũmĩrĩra, no nginya eerege we mwene, na oyage mũtharaba wake o mũthenya, aanũmagĩrĩre.
பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
24 Nĩgũkorwo ũrĩa wothe wendaga kũhonokia muoyo wake nĩakoorwo nĩguo, no ũrĩa wothe ũkoorwo nĩ muoyo wake nĩ ũndũ wakwa nĩakaũhonokia.
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
25 Mũndũ angĩĩguna nakĩ angĩĩgwatĩra thĩ yothe, no ate muoyo wake kana orwo nĩguo?
யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன?
26 Mũndũ o wothe ũngĩconoka nĩ ũndũ wakwa na nĩ ũndũ wa ciugo ciakwa, o nake nĩagaconokerwo nĩ Mũrũ wa Mũndũ rĩrĩa agacooka arĩ na riiri wake, na riiri wa Ithe, o na wa araika arĩa atheru.
யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்.
27 Ngũmwĩra atĩrĩ na ma, amwe a aya marũngiĩ haha matigacama gĩkuũ matonete ũthamaki wa Ngai.”
“இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார்.
28 Mĩthenya ta ĩnana thuutha wa Jesũ kwaria ũhoro ũyũ nĩathiire na Petero, na Johana na Jakubu akĩambata nao kĩrĩma igũrũ makahooe.
இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார்.
29 Na rĩrĩa ahooyaga, mũhaanĩre wa ũthiũ wake ũkĩgarũrũka, nacio nguo ciake ikĩerũha igĩkenga o ta rũheni.
அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது.
30 Na rĩrĩ, andũ eerĩ, nĩo Musa na Elija,
மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
31 makiumĩrĩra Jesũ marĩ na riiri mũnene makĩaria nake. Maaragia ũhoro wa gũkua gwake, kũrĩa aakirie kũhingia akinya Jerusalemu.
எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 Petero hamwe na arĩa maarĩ nake nĩmahĩtĩtwo nĩ toro, na rĩrĩa mookĩrire, makĩona riiri wake na andũ acio eerĩ maarũngiĩ hamwe nake.
பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள்.
33 Na rĩrĩa andũ acio maatiganaga na Jesũ, Petero akĩmwĩra atĩrĩ, “Mwathani, nĩ wega tũikare gũkũ. Reke twake ithũnũ ithatũ, kĩmwe gĩaku, na kĩmwe kĩa Musa, na kĩmwe kĩa Elija.” (Nowe ndaamenyaga ũrĩa oigaga.)
அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான்.
34 Na o akĩaragia-rĩ, itu rĩkiumĩra na rĩkĩmahumbĩra, nao magĩĩtigĩra mũno nĩ kũhumbĩrwo nĩ itu rĩu.
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள்.
35 Mũgambo ũkiuma itu-inĩ rĩu, ũkiuga atĩrĩ, “Ũyũ nĩwe Mũrũ wakwa, ũrĩa ndĩĩthuurĩire; mũiguagei.”
அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
36 Thuutha wa mũgambo ũcio kũiguĩka, makĩona atĩ Jesũ aarĩ wiki. Nao arutwo magĩkira ki na ũhoro ũcio, gũtirĩ mũndũ o na ũmwe meerire matukũ-inĩ macio maũndũ marĩa moonete.
அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.
37 Mũthenya ũyũ ũngĩ, maikũrũka kuuma kĩrĩma-inĩ, Jesũ agĩtũngwo nĩ andũ aingĩ.
மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது.
38 Na rĩrĩ, mũndũ warĩ gatagatĩ-inĩ ka andũ acio akĩanĩrĩra, akiuga atĩrĩ, “Mũrutani, ndagũthaitha ũrore mũriũ wakwa, nĩgũkorwo nĩ mwana wakwa wa mũmwe.
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை.
39 na ngoma thũku nĩĩmũnyiitaga na agakaya o rĩmwe; ningĩ ĩkamũrũnda na ĩkamũthiorania, ĩgatũma arute mũhũyũ na kanua. Ndĩmũrekagia o na hanini, na nĩĩramwananga.
ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது.
40 Ndĩrathaithire arutwo aku maingate ngoma ĩyo, no mararemwo.”
அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான்.
41 Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Rũciaro rũrũ rũtetĩkagia na rũremi, nĩ nginya rĩ ngũikara hamwe na inyuĩ, na ngũmũkirĩrĩria nginya rĩ? Rehe mũrũguo haha.”
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார்.
42 Rĩrĩa kamwana kau gaathiiaga harĩ Jesũ, ndaimono ĩyo ĩgĩgatungumania thĩ, na ĩgĩgathiorania. No Jesũ agĩkũũma roho ũcio mũũru, akĩhonia kamwana kau, agĩgacookeria ithe.
அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார்.
43 Nao othe makĩgegio nĩ ũnene wa Ngai. Hĩndĩ ĩrĩa andũ othe maagegetio nĩ ũrĩa wothe Jesũ eekĩte, akĩĩra arutwo ake atĩrĩ,
அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம்,
44 “Thikĩrĩriai wega ũrĩa ngũmwĩra: Mũrũ wa Mũndũ nĩegũkunyanĩrwo aneanwo moko-inĩ ma andũ.”
“நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
45 No-o matiamenyire ũguo nĩ kuuga atĩa. Nĩmahithĩtwo ũhoro ũcio, nĩ ũndũ ũcio makĩaga kũũmenya, na magĩĩtigĩra kũmũũria ũhoro ũcio.
அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள்.
46 Na gũkĩgĩa na ngarari gatagatĩ ka arutwo makĩũrania nũũ wao ũngĩtuĩka mũnene kũrĩ arĩa angĩ.
சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது.
47 Nake Jesũ, tondũ nĩamenyaga meciiria mao, akĩoya kaana kanini agĩkarũgamia hakuhĩ nake.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார்.
48 Agĩcooka akĩmeera atĩrĩ, “Ũrĩa wothe wamũkagĩra kaana gaka thĩinĩ wa rĩĩtwa rĩakwa, nĩ niĩ aamũkagĩra; na ũrĩa ũnyamũkagĩra ti niĩ aamũkagĩra, no nĩ ũrĩa wandũmire. Nĩgũkorwo ũrĩa mũnini gatagatĩ-inĩ kanyu inyuothe, ũcio nĩwe mũnene kũmũkĩra.”
பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார்.
49 Nake Johana akĩmwĩra atĩrĩ, “Mwathi, nĩtũronire mũndũ akĩingata ndaimono na rĩĩtwa rĩaku, na ithuĩ tũrageria kũmũgiria tondũ ti ũmwe witũ.”
அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
50 Nake Jesũ akĩmeera atĩrĩ, “Mũtikamũgirie, nĩgũkorwo ũrĩa ũtarĩ ũthũ na inyuĩ, ũcio nĩ ũmwe wanyu.”
அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார்.
51 Na rĩrĩ, kahinda gake gaakuhĩrĩria ga kwambata matu-inĩ, Jesũ nĩatuire itua rĩa gũthiĩ Jerusalemu.
இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார்.
52 Nake agĩtũma andũ mathiĩ mbere yake kũhaarĩria maũndũ nĩ ũndũ wake, magĩthiĩ magĩtoonya gatũũra kamwe ga Samaria;
அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள்.
53 no andũ a kũu matiamũnyiitire ũgeni, tondũ aathiiaga Jerusalemu.
அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை.
54 Rĩrĩa arutwo ake, Jakubu na Johana monire ũguo makĩũria atĩrĩ, “Mwathani, nĩũkwenda twĩtie mwaki uume igũrũ ũmaniine?”
அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள்.
55 Nowe Jesũ akĩĩhũgũra akĩmakaania,
ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.
56 nao magĩthiĩ gatũũra kangĩ.
அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள்.
57 Rĩrĩa maathiiaga na njĩra, mũndũ ũmwe akĩmwĩra atĩrĩ, “Nĩndĩkũrũmagĩrĩra kũrĩa guothe ũrĩthiiaga.”
அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
58 Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Mbwe nĩ irĩ marima na nyoni cia rĩera-inĩ nĩ irĩ itara, no rĩrĩ, Mũrũ wa Mũndũ ndarĩ handũ angĩigĩrĩra mũtwe wake.”
இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
59 Akĩĩra mũndũ ũngĩ atĩrĩ, “Nũmĩrĩra.” No mũndũ ũcio akĩmũcookeria atĩrĩ, “Mwathani, reke nyambe thiĩ ngathike baba.”
அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
60 Jesũ akĩmwĩra atĩrĩ, “Reke arĩa akuũ mathikage akuũ ao ene, no wee thiĩ ũkahunjie ũhoro wa ũthamaki wa Ngai.”
அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
61 Na mũndũ ũngĩ akĩmwĩra atĩrĩ, “Mwathani, niĩ nĩngũkũrũmĩrĩra, no reke nyambe thiĩ ngoigĩre andũ aitũ ũhoro.”
இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான்.
62 Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Gũtirĩ mũndũ o na ũrĩkũ ũnyiitaga mũraũ na guoko gwake na agacooka kũrora na thuutha wagĩrĩire gũtungata ũthamaki-inĩ wa Ngai.”
அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.